மடலாண்டி
பச்சை வேர்கடலை ஒரு கப், தக்காளி, பட்டை, கிராம்பு, ஏலக்காய், தலா ஒன்று,வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன், கரம் மசாலா, மிளகாய் தூள் தலா 2ஸ்பூன், உப்பு, எண்ணெய் தேவைக்கு ஏற்றவாறு.
வேர்க்கடலையை உரித்து தண்ணீரில் ஊறவைத்து வேகவைத்துக் கொள்ளவும்.
வெங்காயம் தக்காளி நறுக்கி அரைத்துக் கொள்ளவும்
வாணலி சூடான பின் இஞ்சி பூண்டு விழுது அரைத்த வெங்காயம் தக்காளி விழுது கரம் மசாலா, மிளகாய் தூள் ஆகிய்வற்றை வரிசையாக சேர்த்து வதக்கி, தேவையான தண்ணீர் சேர்க்கவும். பின்னர் வேக வைத்துள்ள வேர்க்கடலையை கொட்டி தேவையான உப்பு சேர்த்து கொதிக்க விட்டு கிரேவி பதத்திற்கு வந்தவுடன் இறக்கி நறுக்கிய கொத்தமல்லி தழை சேர்த்து பரிமாறவேண்டியதுதான்.
0 கருத்துரைகள்:
Post a Comment