
பூர்ண கொழுக்கட்டை
பச்சரிசி 1/2கிலோ, வெல்லம்350கி, தேங்காய் 1
ஏலக்காய் 6
தேங்காய் எண்ணெய் 2 ஸ்பூன்
உப்பு தேவைக்கு
பச்சரிசியை நன்றாக ஊற வைத்து ஊறிய பின் நீரை வடித்துவிட்டு கெட்டியான மாவாக சிறிது உப்பைச் சேர்த்து அரைத்துக் கொள்ளவேண்டும்.
வாணலி சூடான பின் இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் விட்டு மாவை அதில் போட்டு, கெட்டியாக வரும் வரை கிளறி வைத்துக்கொள்ளவும்.
தேங்காயை துருவி விழுதாக அரைத்துக்கொண்டு, அதனுடன் பொடித்து வைத்துள்ள வெல்லம் ஏலக்காய் பொடி சேர்த்து கெட்டியாக கிளற வேண்டும்.
பிறகு மாவை சிறிது சிறிதாக உருட்டி கையில் வைத்து சிறிய பூரி போல் தட்டி, அதில் ஒரு கரண்டி பூரணம் வைத்து இருஓரமும் ஒரே பக்கத்தில் வறுமாறு மடித்து நன்றாக ஒட்டவும்.
அனைத்து மாவையும் இதேபோல் கொழுக்கட்டையாக செய்தபிறகு பதினைந்திலிருந்து இருபது நிமிடம் வரை ஆவியில் இட்லி தட்டில் வைத்து வேகவிடவும்.
வெந்தபின் இறக்கி சாப்பிட சூடான பூரண கொழுக்கட்டை ரெடி.
குழந்தைகள் பள்ளியில் இருந்து வந்தவுடன் சூடாகத் தர, விரும்பிச் சாப்பிடுவார்கள்