பட்டாணி 200 கிராம், துருவிய கேரட் ஒரு கப், வெள்ளரிக்காய் ஒருகப், மாங்காய், தேங்காய் துருவல் ஒரு கப்,
பொடியாக நறுக்கிய வெங்காயம் ஒரு கப்,
மிளகாய் தூள் 2 ஸ்பூன், கடுகு கருவேப்பிலை,கொத்தமல்லி தாளிக்க தேவையான அளவு.
எண்ணெய் தாளிக்க
உப்பு தேவையான அளவு.
பட்டாணியை நன்கு ஊறவைத்து ஊறியபின் குக்கரில் வேக வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு பொரிந்ததும், வெங்காயம்சேர்த்து வதக்கவும்.
பிறகு மிளகாய்தூள், உப்பு, நீர் சேர்த்து கொதிக்க விட்டு வேக வைத்த பட்டாணி, காய்கறிகள் சேர்த்து நன்கு கிளறவேண்டும்.
நறுக்கிய கொத்தமல்லி தழை சேர்த்து கிளறி இறக்கவும்
பூரி சப்பாத்தி இட்லி ஆகியவற்றிற்கு ஏற்றது.
0 கருத்துரைகள்:
Post a Comment