I am a free bird

ஆலு பூரி

April 30, 2009

ஆலு பூரி

மைதா 1/2கிலோ

உருளைக் கிழங்கு 200 கிராம்

சோடாமாவு 1 சிட்டிகை

உப்பு

எண்ணெய் பொரிக்கத்தேவையான் அளவு

உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் உரித்து மைதா மாவுடன் சேர்த்து, உப்பு, சோடா மாவும் சேர்த்து பிசைந்து கொள்ளவேண்டும். இக் கலவையை அரைமணி நேரம் ஊறவைக்கவேண்டும்.

பிறகு சிறுசிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்தி கட்டையில் வட்ட வடிவில் தேய்த்து எண்ணெயில் பொரித்து எடுக்க வேண்டும்

வித்தியாசமான சுவையுடன் கூடியது என்பதால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.



ஆலு பராத்தா

ஆலு பராத்தா

கோதுமை மாவு மூன்று கப்,

தண்ணீர் ஒருகப்

உப்பு

எண்ணெய் ஒரு ஸ்பூன்

உருளைக்கிழங்கு 2

வெங்காயம் 1

பச்சை மிளகாய் 2

கரம் மசாலா

கொத்தமல்லி

ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை கொட்டி அதில் உப்பு, எண்ணெய் தண்ணீர் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.

இதை முப்பது நிமிடம் ஊற வைக்கவும்

உருளைக்கிழங்கை வேக வைத்து தோலை நீக்கி நன்கு மசித்து வைக்கவும்.

வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைக்கவும்

மசித்து வைத்த உருளைக்கிழங்கோடு நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கரம் மசாலா கொத்து மல்லி தழை, உப்பு, சேர்த்து பிசைந்து கொள்ளவும். இதை சிறுசிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும்.

பிசைந்து வைத்துள்ள மாவை சிறுசிறு உருண்டையாக உருட்டி வட்ட வடிவில் தேய்த்து, அதன் நடுவில் மசாலா உருண்டைகளை வைத்து நன்றாக மூடி மீண்டும் தேய்க்கவும்.

தோசைக்கல்லை சூடாக்கி அதில் இந்த பராத்தாவை போடவும். இருபக்கமும் பொன்னிறமாக வேகவிட்டுசுற்றிலும் நெய் விட்டு எடுத்தால் சூடான ஆலு பராத்தா ரெடி.

ஓட்ஸ் பட்டூரா

ஓட்ஸ் பட்டூரா

கோதுமை மாவு ஒரு கப்

ஓட்ஸ் ஒரு கப்

ரவை நாலு ஸ்பூன்

நெய் 2 ஸ்பூன்

உப்பு

எண்ணெய் பொரிக்க தேவையான அளவு

முதலில் ஓட்சை மிக்சியில் போட்டு மாவாக பொடி செய்து கொள்ளவும்.

ஓட்ஸ் மாவு, கோதுமை மாவு, ரவை, நெய், உப்பு, அனைத்தையும் ஒன்றாக கலந்து தண்ணீர் சேர்த்து பூரி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவேண்டும்.

இருபது நிமிடங்கள் மாவு ஊறியதும் வட்ட வடிவில் பூரிகளாக தேய்த்து எண்ணையில் பொரித்து எடுக்க வேண்டும்.

உருளைக்கிழங்கு மசாலாவுடன் சேர்த்து சாப்பிட சத்தான பூரி ரெடி.

முருங்கைக்காய் புலவ்

முருங்கைக்காய் புலவ்

பாசுமதி அரிசி ஒருகப்

முருங்கைக்காய் ஒன்று

கடுகு 1/2 ஸ்பூன்

வெங்காயம் ஒன்று

பச்சை மிளகாய் இரண்டு

இஞ்சி பூண்டு விழுது ஒரு ஸ்பூன்

மஞ்சள் தூள் சிறிது

மிளகாய் தூள் 1/4 ஸ்பூன்

எண்ணெய் 2 ஸ்பூன்

உப்பு

முந்திரி 4

முருங்கைக்காயை சிறிது நீளமாக வெட்டிக்கொள்க.

வெங்காயம் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும்

வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு தாளித்து,முந்திரி, முருங்கைக்காய், இஞ்சி பூண்டு விழுது வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்கவும். பச்சை வாசனை போனதும் மஞ்சள் பொடி கறிவேப்பிலை மிளகாய்தூள் உப்பு சேர்க்கவும். இது நன்கு வெந்ததும் இறக்கவும்.

குக்கரில் அரிசியை களைந்து மூன்று கப் தண்ணீர் விட்டு, வாணலியில் உள்ள கலவையை அரிசியோடு கொட்டி நன்கு கிளறி, குக்கரை மூடி விட்டு விசில் வந்ததும் இறக்கினால் முருங்கைக்காய் புலவ் சாப்பிட ரெடி.


பிரட் புலவ்

பிரட் புலவ்

பாஸ்மதி அரிசி ஒரு கப்

காய்கறி கலவை இரண்டு கப்

பட்டாணி 1/4 கப்

வெங்காயம் 1 கப்

பிரட் ஸ்லைஸ் 3

ஏலம், லவங்கம், பட்டை, பூண்டு, இஞ்சி சிறிது அளவு

முந்திரி 10

திராட்சை 10

பச்சைமிளகாய் 4

எண்ணெய் 3ஸ்பூன்

நெய் 3ஸ்பூன்

உப்பு

அரிசியை நன்கு களைந்து 15நிமிடம் ஊறவிட்டு நீரை வடித்து தனியாக வைக்கவும்.

வானலியில் ஒருஸ்பூன் நெய் விட்டு காய்ந்ததும் அரிசியை வறுக்கவும்.

அரைகப் வெங்காயம் பச்சைமிளகாய், ஏலம் லவங்கம், பட்டை, பூண்டு, இஞ்சி,ஆகியவற்றை நன்கு அரைத்துக் கொள்ளவும்.

பிரட்டை சிறு துண்டுகளாக்கி நெய்யில் பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்

குக்கரை அடுப்பில் வைத்து நெய் சேர்த்து அரைத்த மசாலா கலவை, வெங்காயம், காய்கறி, பட்டாணி, ஆகியவற்றைவரிசையாக சேர்த்து வதக்கவும்.

இதில் சிறிது நீர் விட்டு வேகவிடவும். காய் வெந்ததும் அரிசி தண்ணீர் உப்பு சேர்த்து கிளறி குக்கரை மூடி ”வெயிட்” போடவும். வெந்ததும் முந்திரி, திராட்சை வறுத்து பிரட்டுடன் சாதத்தில் போட்டு கிளறி சாப்பிட வேண்டியதுதான்


ரவா இட்லி

ரவா இட்லி

ரவை ஒரு கப்

கடுகு, கடலை பருப்பு, கருவேப்பிலை, கொத்துமல்லி எண்ணெய் ஆகியவை தாளிக்க தேவையான அளவு

இஞ்சி சிறுதுண்டு

பச்சை மிளகாய் மூன்று

கேரட் ஒன்று

தயிர் ஒரு கப்

முந்திரி பத்து

ஆப்ப சோடா சிறிது

உப்பு

முதலிலி ரவையை பொன்னிறமாக வறுக்கவும்

வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, கடலைபருப்பு,இஞ்சி, நறுக்கிய பச்சைமிளகாய்,கொத்தமல்லி தழை, கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். அடுப்பில் இருந்து இறக்கி துருவிய கேரட், தயிர், தண்ணீர் ஆப்பசோடா, உப்பு சேர்த்து ரவையுடன் நன்கு அழுத்தி பிசைந்து கொள்ளவும் அரைமணிநேரம் ஊறிய பின் இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக்கொண்டு இட்லி தட்டில் ஊற்றி ஒவ்வொரு இட்லியிலும் ஒரு வறுத்த முந்திரியை வைத்து வேகவிடவும். பத்து நிமிடத்தில் ரவா இட்லி ரெடி.

வெஜிடபிள் ஸாக்

வெஜிடபிள் ஸாக்

கேரட் 2, பீன்ஸ் 100, தட்டைப்பயிறு 25கிராம், உருளைக்கிழங்கு 2, தக்காளி 2, இஞ்சி 1 துண்டு,பச்சைமிளகாய் 3, முந்திரிப் பருப்பு 10, பால் பவுடர் 1 ஸ்பூன், உப்பு

கேரட், பீன்ஸ், உருளை ஆகியவற்றை நறுக்கி வேக வைக்கவும்.

தக்காளி பச்சைமிளகாய், இஞ்சி, முந்திரிப்பருப்பை நைசாக அரைத்துக்கொள்ளவும்.

ஊறவைத்த தட்டைப் பயிறை தனியே வேக வைத்து எடுத்து வேக வைத்த காய்கறிகளுடன் சேர்த்துக்கொள்ளவேண்டும்.

அரைத்த தக்காளி கலவையை பால் பவுடரில் கல்ந்து காய்களுடன் சேர்த்து தேவையான உப்பு தண்ணீர் சேர்த்து மூன்று நிமிடங்கள் கொதிக்க விட்டு இறக்கி, கொத்த மல்லி தழை தூவி பரிமாற சுவையோ சுவைதான்

இந்த ஸாக் சப்பாத்தி, பூரி, நாண், என அனைத்திற்கும் ஏற்றது.

மடலாண்டி

மடலாண்டி

பச்சை வேர்கடலை ஒரு கப், தக்காளி, பட்டை, கிராம்பு, ஏலக்காய், தலா ஒன்று,வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன், கரம் மசாலா, மிளகாய் தூள் தலா 2ஸ்பூன், உப்பு, எண்ணெய் தேவைக்கு ஏற்றவாறு.

வேர்க்கடலையை உரித்து தண்ணீரில் ஊறவைத்து வேகவைத்துக் கொள்ளவும்.

வெங்காயம் தக்காளி நறுக்கி அரைத்துக் கொள்ளவும்

வாணலி சூடான பின் இஞ்சி பூண்டு விழுது அரைத்த வெங்காயம் தக்காளி விழுது கரம் மசாலா, மிளகாய் தூள் ஆகிய்வற்றை வரிசையாக சேர்த்து வதக்கி, தேவையான தண்ணீர் சேர்க்கவும். பின்னர் வேக வைத்துள்ள வேர்க்கடலையை கொட்டி தேவையான உப்பு சேர்த்து கொதிக்க விட்டு கிரேவி பதத்திற்கு வந்தவுடன் இறக்கி நறுக்கிய கொத்தமல்லி தழை சேர்த்து பரிமாறவேண்டியதுதான்.

சப்பாத்தி, பூரி, இட்லிக்கு ஏற்ற கிரெவி

சன்னா மசாலா

சன்னா மசாலா

வெள்ளைக்கொண்டைகடலை கால் கிலோ

வெங்காயம் 3

தக்காளி 6

இஞ்சி பூண்டு விழுது 2 ஸ்பூன்

பச்சைமிளகாய் 6

சீரகம் 1/2ஸ்பூன்

மஞ்சள்தூள் ஒரு சிட்டிகை

சன்னாமசாலா பவுடர் 1 ஸ்பூன்

தனியா தூள் 2 ஸ்பூன் மிளகாய்தூள் 4 ஸ்பூன்

எண்ணெய் உப்பு தேவையான அளவு,

வெள்ளைக்கொண்டைக்கடலையை முதல் நாள் இரவே ஊறவைக்க வேண்டும் காலையில் குக்கரில் வேக வைக்கவேண்டும்.

வெந்த கொண்டைக்கடலையை ஒருகைஅளவு எடுத்து மிக்ஸியில் நன்றாக மசிக்கவேண்டும்

தக்காளி, பச்சைமிளகாயை தனித்தனியாக அரைத்துக்கொள்ளவும்.

வாணலியை சூடாக்கி எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம் போட்டு பொரிந்ததும், இஞ்சி பூண்டு விழுது 2 ஸ்பூன் சேர்த்து பொடியாக நறுக்கிய வெங்காயம்போட்டு வதக்கி, சன்னா மசாலா தூள் போட்டு, அரைத்த தக்காளி, பச்சைமிளகாய் விழுது மசித்த கொண்டைக்கடலை விழுது தேவையான் உப்பு, மஞ்சள்தூள் ஒரு சிட்டிகை, தனியாத்தூள், மிளகாய்தூள்,அரைகப் நீர் சேர்த்து கொதிக்க வைத்து கிரேவி பதத்திற்கு வந்ததும் நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி சப்பாத்தி, தோசை, இட்லி ஆகிய வற்றிற்கு தொட்டு சாப்பிடவேண்டியதுதான்.

சைனிஸ் வெஜிடபிள் கிரேவி

சைனிஸ் வெஜிடபிள் கிரேவி.

கேரட், காலி பிளவர், முட்டைகோஸ் தலா 100 கிராம்,

பொடியாக நறுக்கிய வெங்காயம் ஒரு கப்

பூண்டு 4 பல்,

மிளகுதூள் 1 ஸ்பூன்

எலுமிச்சை பழம் சாறு 2 ஸ்பூன்

சோயா சாஸ் 1 ஸ்பூன்

அஜினோமோட்டோ ஒரு சிட்டிகை

சோள மாவு 1 ஸ்பூன் சர்க்கரை ஒரு ஸ்பூன்

எண்ணெய் உப்பு தேவையான அளவு,

எல்லாக்காய்களையும் பொடியாக நறுக்கி வைக்கவும்.

வாணலியை சூடாக்கி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய பூண்டு, வெங்காயம், காய்கள் சேர்த்து வதக்கி,

எலுமிச்சை சாறு, மிளகுத்தூள், உப்பு ஜோயா சாஸ், சிறிது சர்க்கரை சேர்த்து நன்கு வதக்கி, சோள மாவை சிறிது தண்ணீரில் கரைத்து வதங்கிய கலவையில் சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும்.

பூரி சப்பாத்தி நாண் போன்ற அனைத்திற்கும் ஏற்றதுணை உணவு.

வெஜிடபிள் பட்டாணி கிரேவி


பட்டாணி 200 கிராம், துருவிய கேரட் ஒரு கப், வெள்ளரிக்காய் ஒருகப், மாங்காய், தேங்காய் துருவல் ஒரு கப்,

பொடியாக நறுக்கிய வெங்காயம் ஒரு கப்,

மிளகாய் தூள் 2 ஸ்பூன், கடுகு கருவேப்பிலை,கொத்தமல்லி தாளிக்க தேவையான அளவு.

எண்ணெய் தாளிக்க

உப்பு தேவையான அளவு.

பட்டாணியை நன்கு ஊறவைத்து ஊறியபின் குக்கரில் வேக வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு பொரிந்ததும், வெங்காயம்சேர்த்து வதக்கவும்.

பிறகு மிளகாய்தூள், உப்பு, நீர் சேர்த்து கொதிக்க விட்டு வேக வைத்த பட்டாணி, காய்கறிகள் சேர்த்து நன்கு கிளறவேண்டும்.

நறுக்கிய கொத்தமல்லி தழை சேர்த்து கிளறி இறக்கவும்

பூரி சப்பாத்தி இட்லி ஆகியவற்றிற்கு ஏற்றது.

உக்காரா

பாசிப்பருப்பு ஒரு க்ப்,

அரிசி மாவு 2 ஸ்பூன்

சர்க்கரை ஒரு கப்

தேங்காய் துருவல் 1/2 கப்

முந்திரிப்பருப்பு 2 ஏலம் 2

நெய் 1/4 கப்

எண்ணெய் 1 ஸ்பூன்

பாசிப்பருப்பை மிதமான தீயில் லேசாக வறுத்து குழையாமல் வேக வைத்து தண்ணிரை வடிகட்டவும், எண்ணெய் நெய் கலந்து காய வைத்து அதில் அரிசி மாவு, முந்திரி,ஏலம் சேர்த்து மிதமான தீயில் வறுக்கவும்

அடுப்பில் வாணலியை வைத்து சர்க்கரையுடன் கால் கப் தண்ணீர் சேர்த்து கரைய விடவும், மாவில் சர்க்கரைப் பாகை விட்டு, வெந்த பாசிப்பருப்பு, தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக கிளறவும்.

உக்காரா சாப்பிடத் தயார்.