ஓட்ஸ் பட்டூரா
கோதுமை மாவு ஒரு கப்
ஓட்ஸ் ஒரு கப்
ரவை நாலு ஸ்பூன்
நெய் 2 ஸ்பூன்
உப்பு
எண்ணெய் பொரிக்க தேவையான அளவு
முதலில் ஓட்சை மிக்சியில் போட்டு மாவாக பொடி செய்து கொள்ளவும்.
ஓட்ஸ் மாவு, கோதுமை மாவு, ரவை, நெய், உப்பு, அனைத்தையும் ஒன்றாக கலந்து தண்ணீர் சேர்த்து பூரி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவேண்டும்.
இருபது நிமிடங்கள் மாவு ஊறியதும் வட்ட வடிவில் பூரிகளாக தேய்த்து எண்ணையில் பொரித்து எடுக்க வேண்டும்.
உருளைக்கிழங்கு மசாலாவுடன் சேர்த்து சாப்பிட சத்தான பூரி ரெடி.
0 கருத்துரைகள்:
Post a Comment