தீயல்:
தேவை
சின்ன வெங்காயம் 1/4கிலோ
சேனைக்கிழங்கு 1/4கிலோ
பாகற்க்காய் 1
புளி எலுமிச்சம்பழம் அளவு
மிளகாய் வற்றல் 8
தனியா 3 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் சிறிது
தேங்காய் ஒன்று
தேங்காய் எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன்.
உப்பு தேவைக்கு
கடுகு தாளிக்க
செய்முறை:
வெங்காயம், பாகற்க்காயை மெல்லியதாக நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.
சேனைக்கிழங்கை சிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
தேங்காயை துருவி வைக்கவும்.
புளியை ஊறவைத்து கெட்டியாக கரைத்துக்கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெயை ஊற்றி வெங்காயம் பாகற்க்கயை நன்கு வதக்கி தனியாக வைக்கவும்
மேலும் ஒரு ஸ்பூன் தே.எண்ணெய் ஊற்றி மிளகாய் வற்றல் தனியாவை கருகாமல்
வறுக்கவும்.
அதே வாணலியில் துருவிய தேங்காயைப் போட்டு அடுப்பை சிம்மில் வைத்து சிவக்க வறுத்துக் கொள்ளவும்.
சேனைக்கிழங்கை கழுவி அதனுடன் வதக்கிய வெங்காயம் பாகற்காய் மஞ்சள் தூளை சேர்த்து வேக விடவும்.
வறுத்த மிளகாய்வற்றல், மல்லி, தேங்காயை வெண்ணெய் போல் அரைக்கவும். காய் வெந்தவுடன் புளியைஊற்றிவிடவும்.
கொதித்தவுடன் உப்பு, அரைத்து வைத்துள்ள மிளகாயை சேர்க்கவும்.
கொதித்து கெட்டியானதும் கடுகு, மிளகாய், கருவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.
இந்த தீயல் சாதம், தோசை ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட ஏற்றது.
யார் நம்பர் ஒன் - எம்.ஜி.ஆர்.
-
நம்பர் 1 இடம் நிலையில்லாதது மாறிக்கொண்டே இருக்கும் என்பதை மக்கள் திலகம்
எம்.ஜி.ஆர். அவர் வாழ்வில் நடந்த சம்பவம் மூலம் அழகாக விளக்குகிறார்.
எம்.ஜி.ஆர்., எ...