
கடலை மாவு 300கிராம்
Today's special சமைக்கவும் ருசிக்கவும்
இட்லி
புழுங்கல் அரிசி 300 கிராம்
உளுந்து 75 கிராம்
வெந்தயம் ஒரு ஸ்பூன்
அரிசியையும் உளுந்தையும் தனித் தனியாக 4மணி நேரம் ஊறவைத்து உளுந்தை முதலில் களைந்து நன்கு வெண்ணெய்போல் ஆட்டிக்கொள்ளவும். பின்னர் அரிசியையும் இதே போல் ஆட்டிக்கொள்ளவும். பிறகு இரண்டுமாவையும் கலந்து உப்பு போட்டு பிசைந்து ஐந்திலிருந்து ஆறுமணிநேரம் புளிக்க வைக்கவும்.
மாவை கரண்டி போட்டு நன்கு கலக்கி இட்லி தட்டில் ஊற்றி, அடுப்பில் வைத்து நன்கு வெந்தவுடன் இறக்கி அகலமான தட்டில் இட்லிகளை கவிழ்த்து சூடு ஆறும் முன்பு பறிமாறவும்.
இதற்கு தக்காளி சட்னி, தேங்காய் சட்னி, சாம்பார், இட்லி மிளகாய் பொடி போன்றவை தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும்.
தோசை மாவு அரைக்க வேண்டும் என்றால் அரிசி 300 கிராமும் உளுந்து 100 கிராமும் ஊறவைத்து அரைக்கவேண்டும். அரைத்தபின் இதே போன்று புளிக்க வைத்து, கலக்கி தோசைக்கல்லில் தோசையாக வார்த்து இருபக்கமும் வேகவைத்து எடுத்து பரிமாறவும்.