I am a free bird

பருப்பு சாதம்

December 28, 2009



பருப்பு சாதம்

அரைக்கிலோ அரிசி,
கால் லிட்டர் துவரம் பருப்பு,
தேவையான அளவு உப்பு,
நெய் 4 மேஜைக்கரண்டி,
எண்ணெய் 125 மி.லி.,
வெந்தயம் 2 தேக்கரண்டி,
பெருங்காயம் சிறு துண்டு,
தனியா 2 மேஜைக்கரண்டி,
தேங்காய் துருவல் ஒரு கப்,
பச்சை மிளகாய் 8,
முந்திரிப்பருப்பு 20,
வற்றல்மிளகாய் 20,
புளி எலுமிச்சை அளவு
கொத்தமல்லி தழை சிறிதளவு,
கறிவேப்பிலை ஒரு கொத்து,
கடுகு ஒரு தேக்கரண்டி,
மசாலா பொடி 2 தேக்கரண்டி,
கசகசா 2 தேக்கரண்டி,
கிராம்பு 6,
சோம்பு சிறிதளவு,
ஏலக்காய் 6.



மிளகாய், வெந்தயம், தனியா, கிராம்பு, கசகசா,
சோம்பு, ஆகிவற்றை சிறிதளவு
எண்ணெயில் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
தேங்காயைத் துருவிபொன் வறுவலாக
வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
இவையெல்லாவற்றையும் இடித்து
பொடி செய்து கொள்ளவும்.

பருப்பை அரை லிட்டர் நீரில் மஞ்சள் பொடி கலந்து வேகவிடவும்.
நன்றாக பருப்பு வெந்ததும் மூன்று லிட்டர் நீர் விடவும்.
அதனுடன் அரிசியைப் போட்டு வேகவிடவும்.
அரிசியும்பருப்பும் நன்றாக வெந்து
பொங்கல் போல் வரும் சமயத்தில்
புளியைக் கரைத்து அதில் ஊற்றி நன்றாகக் கிளறவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் ஏலம், கடுகு,
பச்சைமிளகாய், கறிவேப்பிலை போடவும்.
கடுகு வெடித்தவுடன் அதை பருப்பு சாதத்துடன்கலந்து
நன்றாகக் கிளறவும். பின்னர் சாதத்துடன் மசாலாப் பொடி,
வறுத்துப் பொடித்த மிளகாய் வற்றல், வெந்தயம்,தனியா
ஆகியவற்றைப் போட்டு, மறுபடியும் சிறிது புளியைக்
கரைத்து ஊற்றவும். உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

இந்த சாதத்தை சிறிது நேரம் அடுப்பில் வைத்திருந்தால் பருப்பு சாதம்கெட்டியாகி விடவும். பின்பு முந்திரிபருப்பு வறுத்து சேர்த்து கொத்துமல்லிதழையைத் தூவி
நன்கு கிளறினால்பருப்பு சாதம் சாப்பிடத் தயார்.








பயத்தம் பருப்பு தோசை

July 06, 2009



பயத்தம் பருப்பு தோசை.

பயத்தம் பருப்பு ஒரு கப்,
பச்சைமிளகாய்-3,
இஞ்சி சிறு துண்டு,
வெங்காயம்-1
சீரகம் ஒரு டீஸ்பூன்,
எண்ணெய் தேவைக்கு,
உப்பு-தேவைக்கு.


பயத்தம் பருப்பை ஒரு நாள் இரவு முழுதும் ஊறவிடவும்.
பிறகு நன்கு கழுவி அதோடு பச்சைமிளகாய்,
இஞ்சி, உப்பு சேர்த்து மைய அரைக்கவும்.
இதோடு சீரகத்தையும் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு
கரைத்துக் கொள்ளவும்.

தோசைக்கல்லை காய வைத்து,
சிறிது எண்ணை ஊற்றி கல் முழுவதும் தேய்த்து
அதில் இந்த மாவை மெல்லிய தோசையாக ஊற்றவும்.
சுற்றிலும் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விடவும்.

தோசை பொன்னிறமாக வெந்தவுடன்
திருப்பி போட்டு வேக விடவும்.
அந்த பாகமும் வெந்தவுடன் மீண்டும் திருப்பி போட்டு
பொடியாக நறுக்கிய வெங்காயத்தை அதன் மேல் தூவி
இரண்டாக மடித்து பரிமாறவும்.

இதை இஞ்சி சட்னியுடன் சேர்த்து சாப்பிட
நல்ல ருசியாக இருக்கும்.












காஞ்சி தோசை



காஞ்சி தோசை.

அரிசி 2 கப்,
உளுந்து 1/2கப்,
கடலைபருப்பு ஒரு டீஸ்பூன்,
மிளகுத்தூள் ஒரு டீஸ்பூன்,
மஞ்சள்தூள் 1/4 டீஸ்பூன்,
வெந்தயம் 1/2 டீஸ்பூன்,
தயிர் ஒரு கப்,
பெருங்காயத்தூள் ஒரு சிட்டிகை,
உப்பு, எண்ணெய் தேவைக்கு ஏற்ப.

அரிசி வெந்தயம் கடலைபருப்பு, உளுந்து
எல்லாவற்றையும் ஒன்றாக
3 முதல் 4 மணிநேரம் ஊறவிடவும்.
ஊறியபிறகு மைய அரைக்கவும்.
அதோடு மஞ்சள்தூள், மிளகுதூள்,
தயிர், பெருங்காயம், உப்பு சேர்த்து கலந்து
ஒரு நாள் முழுவதும் புளிக்கவிடவும்.

அடுத்த நாள் தோசைக்கல்லை காய வைத்து
எண்ணெய் தடவி இந்த மாவை
திக்கான தோசையாக ஊற்றினால் காஞ்சி தோசை ரெடி.






பிரட் பிரியாணி,



பிரட் பிரியாணி.

பஸ்மதி அரிசி ஒரு கப்,
காய்கறி கலவை 2 கப்,
பட்டாணி 1/4கப்,
வெங்காயம்-2,
பிரட் ஸ்லைஸ் 2,
முந்திரி 8,
திராட்சை 8,
ஏலக்காய் 2,
பூண்டு 2 பல்,
லவங்கம்2,
இஞ்சி சிறுதுண்டு,
பச்சைமிளகாய்-4,
கொத்தமல்லி சிறிது,
எண்ணெய்4 டேபிள்ஸ்பூன்,
நெய் 3 டேபிள்ஸ்பூன்,
உப்பு தேவையான அளவு.

அரிசியை நன்கு கழுவி 15 நிமிடம் ஊறவிடவும்.
பிறகு வடிகட்டி தனியாக வைத்து கொள்ளவும்.

ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய்விட்டு
வடிகட்டி வைத்துள்ள அரிசியை போட்டு
5 நிமிடம் வறுத்துக் கொள்ளவும்.

மீண்டும் வாணலியில் சிறிது நெய் விட்டு
பிரட்டை பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.

அரை வெங்காயம், இஞ்சி, பூண்டு,பச்சை மிளகாய்,
ஏலக்காய், லவங்கம் ஆகியவற்றை
மைய அரைத்துக் கொள்ளவும்.


பிரஷர் குக்கரில் மீதமுள்ள நெய் மற்றும்
எண்ணெய் விட்டு சூடானதும்
அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து
பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு
நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் பொன்னிறமானதும் காய்கறி கலவை,
பட்டாணியை சேர்க்கவும்.

காய்கறிகள் வதங்கியதும்
வறுத்து வைத்துள்ள அரிசியை போட்டு,
தேவையான அளவு தண்ணீர் விட்டு,
உப்பு போட்டு நன்கு கிளறி
குக்கரை மூடி 3 விசில் வரும் வரை வேக விடவும்.

10 நிமிடம் கழித்து குக்கரை திறந்து
நெய்யில் பொறித்து வைத்துள்ள பிரட்,
முந்திரி , திராட்சையை சேர்த்து கிளறி
கொத்துமல்லி தழையை தூவி பரிமறவும்.








காலிப்ளவர் கிரேவி

June 26, 2009


காலிப்ளவர் கிரேவி:


காலிப்ளவர் - 1,
தக்காளி -2,
பெரிய வெங்காயம் -2,
ஏலக்காய்-3,
சீரகம்1/2 டீஸ்பூன்,
லவங்கம்-3,
கடுகு 1/4 டீஸ்பூன்,
கறிவேப்பிலை 2 கொத்து,
புதினா 2 கொத்து,

துறுவிய தேங்காய் ஒரு கப்,
பச்சைமிளகாய்-4,
இஞ்சி சிறு துண்டு,
பூண்டு -4-பல்,

எண்ணை -5 டீஸ்பூன்,

மஞ்சள்தூள்,
உப்பு தேவைக்கு


இஞ்சி,பூண்டு,மிளகாய்,தேங்காய்,
இவற்றை நைசாக அரைத்து
தனியாக வைக்கவும்.

காலிப்ளவரை சிறிதுசிறிதாக நறுக்கி
வெந்நீரில் போட்டு நன்கு கழுவி,
தேவையான தண்ணீர் விட்டு வேக விடவும்.

வெங்காயம்,தக்காளியை நீளமாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணை ஊற்றி, காய்ந்ததும் கடுகு,
ஏலக்காய், லவங்கம், சீரகம், கருவேப்பிலை,
புதினா சேர்த்து தாளிக்கவும்.
பிறகு வெங்காயம் தக்காளி சேர்க்கவும்.

இவை நன்கு வதங்கியதும்
வேகவைத்துள்ள காலிப்ளவர் சேர்க்கவும்.

இப்போது அரைத்து வைத்துள்ள மசாலா,
மஞ்சள்தூள், உப்பு இவற்றைச் சேர்த்து
பச்சை வாசானை போகும்வரையில் வதக்கவும்.
கிரேவி கெட்டியானதும் இறக்கவும்.

தேவைப்பட்டால் சிறிது தண்ணிர் சேர்க்கலாம்.
காலிப்ளவர் கிரேவி தயார்.





பாகற்காய் ப்ரை



பாகற்காய் ப்ரை.

பாகற்காய்-200கி
வெங்காயம் 150கி
மிளகாய்தூள் 2 டீஸ்பூன்,
உப்பு தேவைக்கு,
தயிர் 50மிலி.

பாகற்கயை சிறிது சிறிதாக நறுக்கிக் கொண்டு
அதில் இருக்கும் விதைகளை நீக்கவும்.
நறுக்கின பாகற்காயோடு, தயிர், உப்பு சேர்த்து பிசறி
ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
(தயிரில் பாகற்காயை பிசறி வைப்பதால்
கசப்புச் சுவை தெரியாது.)

வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து,
பிசறி வைத்துள்ள பாகற்காயையும் போட்டு
அடுப்பை சிம்மில் வைத்து வதக்கவும்.

பாகற்காய் பாதி வெந்ததும் வெங்காயம், மிளகாய்தூள்,
சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்.
பாகற்காய் நன்கு வேகும் வரை வதக்கி இறக்கவும்.
பாகற்காய் ப்ரை தயார்.











காய்கறிக்குருமா



காய்கறிக்குருமா.

பலவிதமான காய்கறிகள் - 2 கப்,
(கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு,)
சின்னவெங்காயம் ஒரு கப்,
சிவப்பு மிளகாய் 8,
பூண்டு- 6 பல்,
மிளகுத்தூள்- 1 டீஸ்பூன்,
சீரகம் - 1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் சிறிது,
தேங்காய், 4 டீஸ்புன்,
நெய் வதக்க தேவையான அளவு,
உப்பு தேவைக்கு.

காய்கற்களை ஒரே விதமாக நறுக்கி,
தேவையான அளவு வெந்நீர் ஊற்றி
சிறிது உப்பு போட்டு மூடி வைக்கவும்.

மிளகாய் பூண்டு, மிளகுத்தூள், சீரகம், மஞ்சள்தூள்,
தேங்காய் சேர்த்து
மிக்சியில் மைய அரைக்கவும்.

வாணலியில் நெய் விட்டு,
வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும்,
அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்க்கவும்.

பிறகு மூடி வைத்துள்ள காய்கறிகளை தண்ணீரோடு கொட்டி
குக்கரில் வைத்து தேவையான உப்பு சேர்த்து வேக விடவும்.
ஒரு விசில் வந்ததும் இறக்கி கிளறி பரிமாறலாம்.

இது சப்பாத்தி பூரிக்கு
தொட்டுச் சாப்பிட செய்துகொடுக்கலாம்.






கீரை வடை

June 17, 2009

கீரை வடை

உளுந்தம் பருப்பு- 1/2 கிலோ,
அரிசிமாவு - ஒரு கப்
இஞ்சி சிறிய துண்டு,
பச்சை மிளகாய்-6
பெரிய வெங்காயம்- 5
கீரை(அரை கீரை, முருங்கைக்கீரை)
கொத்தமல்லி சிறிது,
எண்ணெய், உப்பு தேவைக்கு.

பருப்பை ஒரு மணிநேரம் வரை ஊறவைக்கவும்.

இஞ்சி, பச்சை மிளகாய்,வெங்காயத்தைபொடியாக
நறுக்கிக் கொள்ளவும்

கீரையை சுத்தப்படுத்தி ஆய்ந்து வைக்கவும்.

மிக்ஸியில் உளுந்தம்பருப்பை கரகரப்பாக அரைத்து
அதனுடன் நறுக்கிய வெங்காயம், கீரை, இஞ்சி,
பச்சைமிளகாய், மல்லித்தழை, உப்புச் சேர்த்து
நன்றாக கலந்துகொள்ளவும்.அரிசிமாவையும் சேர்த்துக்
கலந்துகொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் சூடானபின்,
வாழை இலையில் வடைகளைத் தட்டி எண்ணெயில்
போட்டு,வெந்தவுடன் சூடாக பரிமாறவும்.






ஆலு பூரி

April 30, 2009

ஆலு பூரி

மைதா 1/2கிலோ

உருளைக் கிழங்கு 200 கிராம்

சோடாமாவு 1 சிட்டிகை

உப்பு

எண்ணெய் பொரிக்கத்தேவையான் அளவு

உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் உரித்து மைதா மாவுடன் சேர்த்து, உப்பு, சோடா மாவும் சேர்த்து பிசைந்து கொள்ளவேண்டும். இக் கலவையை அரைமணி நேரம் ஊறவைக்கவேண்டும்.

பிறகு சிறுசிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்தி கட்டையில் வட்ட வடிவில் தேய்த்து எண்ணெயில் பொரித்து எடுக்க வேண்டும்

வித்தியாசமான சுவையுடன் கூடியது என்பதால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.



ஆலு பராத்தா

ஆலு பராத்தா

கோதுமை மாவு மூன்று கப்,

தண்ணீர் ஒருகப்

உப்பு

எண்ணெய் ஒரு ஸ்பூன்

உருளைக்கிழங்கு 2

வெங்காயம் 1

பச்சை மிளகாய் 2

கரம் மசாலா

கொத்தமல்லி

ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை கொட்டி அதில் உப்பு, எண்ணெய் தண்ணீர் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.

இதை முப்பது நிமிடம் ஊற வைக்கவும்

உருளைக்கிழங்கை வேக வைத்து தோலை நீக்கி நன்கு மசித்து வைக்கவும்.

வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைக்கவும்

மசித்து வைத்த உருளைக்கிழங்கோடு நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கரம் மசாலா கொத்து மல்லி தழை, உப்பு, சேர்த்து பிசைந்து கொள்ளவும். இதை சிறுசிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும்.

பிசைந்து வைத்துள்ள மாவை சிறுசிறு உருண்டையாக உருட்டி வட்ட வடிவில் தேய்த்து, அதன் நடுவில் மசாலா உருண்டைகளை வைத்து நன்றாக மூடி மீண்டும் தேய்க்கவும்.

தோசைக்கல்லை சூடாக்கி அதில் இந்த பராத்தாவை போடவும். இருபக்கமும் பொன்னிறமாக வேகவிட்டுசுற்றிலும் நெய் விட்டு எடுத்தால் சூடான ஆலு பராத்தா ரெடி.

ஓட்ஸ் பட்டூரா

ஓட்ஸ் பட்டூரா

கோதுமை மாவு ஒரு கப்

ஓட்ஸ் ஒரு கப்

ரவை நாலு ஸ்பூன்

நெய் 2 ஸ்பூன்

உப்பு

எண்ணெய் பொரிக்க தேவையான அளவு

முதலில் ஓட்சை மிக்சியில் போட்டு மாவாக பொடி செய்து கொள்ளவும்.

ஓட்ஸ் மாவு, கோதுமை மாவு, ரவை, நெய், உப்பு, அனைத்தையும் ஒன்றாக கலந்து தண்ணீர் சேர்த்து பூரி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவேண்டும்.

இருபது நிமிடங்கள் மாவு ஊறியதும் வட்ட வடிவில் பூரிகளாக தேய்த்து எண்ணையில் பொரித்து எடுக்க வேண்டும்.

உருளைக்கிழங்கு மசாலாவுடன் சேர்த்து சாப்பிட சத்தான பூரி ரெடி.

முருங்கைக்காய் புலவ்

முருங்கைக்காய் புலவ்

பாசுமதி அரிசி ஒருகப்

முருங்கைக்காய் ஒன்று

கடுகு 1/2 ஸ்பூன்

வெங்காயம் ஒன்று

பச்சை மிளகாய் இரண்டு

இஞ்சி பூண்டு விழுது ஒரு ஸ்பூன்

மஞ்சள் தூள் சிறிது

மிளகாய் தூள் 1/4 ஸ்பூன்

எண்ணெய் 2 ஸ்பூன்

உப்பு

முந்திரி 4

முருங்கைக்காயை சிறிது நீளமாக வெட்டிக்கொள்க.

வெங்காயம் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும்

வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு தாளித்து,முந்திரி, முருங்கைக்காய், இஞ்சி பூண்டு விழுது வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்கவும். பச்சை வாசனை போனதும் மஞ்சள் பொடி கறிவேப்பிலை மிளகாய்தூள் உப்பு சேர்க்கவும். இது நன்கு வெந்ததும் இறக்கவும்.

குக்கரில் அரிசியை களைந்து மூன்று கப் தண்ணீர் விட்டு, வாணலியில் உள்ள கலவையை அரிசியோடு கொட்டி நன்கு கிளறி, குக்கரை மூடி விட்டு விசில் வந்ததும் இறக்கினால் முருங்கைக்காய் புலவ் சாப்பிட ரெடி.


பிரட் புலவ்

பிரட் புலவ்

பாஸ்மதி அரிசி ஒரு கப்

காய்கறி கலவை இரண்டு கப்

பட்டாணி 1/4 கப்

வெங்காயம் 1 கப்

பிரட் ஸ்லைஸ் 3

ஏலம், லவங்கம், பட்டை, பூண்டு, இஞ்சி சிறிது அளவு

முந்திரி 10

திராட்சை 10

பச்சைமிளகாய் 4

எண்ணெய் 3ஸ்பூன்

நெய் 3ஸ்பூன்

உப்பு

அரிசியை நன்கு களைந்து 15நிமிடம் ஊறவிட்டு நீரை வடித்து தனியாக வைக்கவும்.

வானலியில் ஒருஸ்பூன் நெய் விட்டு காய்ந்ததும் அரிசியை வறுக்கவும்.

அரைகப் வெங்காயம் பச்சைமிளகாய், ஏலம் லவங்கம், பட்டை, பூண்டு, இஞ்சி,ஆகியவற்றை நன்கு அரைத்துக் கொள்ளவும்.

பிரட்டை சிறு துண்டுகளாக்கி நெய்யில் பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்

குக்கரை அடுப்பில் வைத்து நெய் சேர்த்து அரைத்த மசாலா கலவை, வெங்காயம், காய்கறி, பட்டாணி, ஆகியவற்றைவரிசையாக சேர்த்து வதக்கவும்.

இதில் சிறிது நீர் விட்டு வேகவிடவும். காய் வெந்ததும் அரிசி தண்ணீர் உப்பு சேர்த்து கிளறி குக்கரை மூடி ”வெயிட்” போடவும். வெந்ததும் முந்திரி, திராட்சை வறுத்து பிரட்டுடன் சாதத்தில் போட்டு கிளறி சாப்பிட வேண்டியதுதான்


ரவா இட்லி

ரவா இட்லி

ரவை ஒரு கப்

கடுகு, கடலை பருப்பு, கருவேப்பிலை, கொத்துமல்லி எண்ணெய் ஆகியவை தாளிக்க தேவையான அளவு

இஞ்சி சிறுதுண்டு

பச்சை மிளகாய் மூன்று

கேரட் ஒன்று

தயிர் ஒரு கப்

முந்திரி பத்து

ஆப்ப சோடா சிறிது

உப்பு

முதலிலி ரவையை பொன்னிறமாக வறுக்கவும்

வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, கடலைபருப்பு,இஞ்சி, நறுக்கிய பச்சைமிளகாய்,கொத்தமல்லி தழை, கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். அடுப்பில் இருந்து இறக்கி துருவிய கேரட், தயிர், தண்ணீர் ஆப்பசோடா, உப்பு சேர்த்து ரவையுடன் நன்கு அழுத்தி பிசைந்து கொள்ளவும் அரைமணிநேரம் ஊறிய பின் இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக்கொண்டு இட்லி தட்டில் ஊற்றி ஒவ்வொரு இட்லியிலும் ஒரு வறுத்த முந்திரியை வைத்து வேகவிடவும். பத்து நிமிடத்தில் ரவா இட்லி ரெடி.