அரிசி பாயாசம்.
பச்சரிசி கால் கப், சர்க்கரை 1க்ப், தேங்காய் அரைமூடி,
முந்திரி, திராட்சை தலா 10, ஏலம் 3,
நெய் சிறிது.
அரிசியை ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.
தேங்காயை துருவி ஊறவைத்த அரிசியுடன் சேர்த்து நன்கு மாவு போல் அரைத்துக்கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் 6கப் நீர் ஊற்றி நன்கு கொதிக்கும் போது அரைத்த மாவையும் சேர்த்துக்கிளறிவிடவும்.
நன்கு கொதித்து வெந்தவுடன் சர்க்கரையை சேர்த்து கிளறவும்.
பிறகு, நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை, ஏலம் சேர்க்கவும்.
இறக்கும்போது சிறிது நெய் விட்டு கிளறி இறக்கிடவும்.
சூடாக பறிமாற சூப்பர் சுவையாக இருக்கும்.
0 கருத்துரைகள்:
Post a Comment