
பால் பாயாசம்.
பால் 1/2 லிட்டர், சர்க்கரை 2கப், பச்சரிசி 1கப்,
முந்திரி பருப்பு 10, சாரப்பருப்பு 10, காய்ந்ததிராட்ச்சை 10, ஏலம் 5,
நெய் 2 ஸ்பூன்.
முதலில் பச்சரிசியை நெய்யில் வறுத்து மிக்சியில் பொடி செய்து தனியாக வைத்துக் கொள்ளவும்
பிறகு கனமான பாத்திரத்தில் பாலுடன் இரண்டுடம்ளர் நீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
அதனுடன் சுத்தமான சர்க்கரையைச் சேர்க்கவும்.
நெய்யில் வறுத்து மிக்சியில் பொடி செய்த பச்சரிசியை, பாலுடன் சேர்த்து, சிறிய தீயில் வைத்து வேக விடவும்.
வெந்து குழைந்து வரும்போது நெய்யில் வறுத்த முந்திரி, சாரப்பருப்பு, திராட்ச்சை சேர்க்கவும்.
ஏலக்காயை பொடி செய்து சேர்த்து நன்கு கிளற வாசனை ஊரை அழைக்கும்.
இதை சூடாகவோ, அல்லது பிரிஜ்ஜில் வைத்து குளிர்ந்த நிலையிலோ விருப்பம் போல் பருகலாம்.
குழந்தைகள் முதல் பெரியவர் வரை மீண்டும் மீண்டும் கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.
1 கருத்துரைகள்:
superup
Post a Comment