பிரட் பிரியாணி.
பஸ்மதி அரிசி ஒரு கப்,
காய்கறி கலவை 2 கப்,
பட்டாணி 1/4கப்,
வெங்காயம்-2,
பிரட் ஸ்லைஸ் 2,
முந்திரி 8,
திராட்சை 8,
ஏலக்காய் 2,
பூண்டு 2 பல்,
லவங்கம்2,
இஞ்சி சிறுதுண்டு,
பச்சைமிளகாய்-4,
கொத்தமல்லி சிறிது,
எண்ணெய்4 டேபிள்ஸ்பூன்,
நெய் 3 டேபிள்ஸ்பூன்,
உப்பு தேவையான அளவு.
அரிசியை நன்கு கழுவி 15 நிமிடம் ஊறவிடவும்.
பிறகு வடிகட்டி தனியாக வைத்து கொள்ளவும்.
ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய்விட்டு
வடிகட்டி வைத்துள்ள அரிசியை போட்டு
5 நிமிடம் வறுத்துக் கொள்ளவும்.
மீண்டும் வாணலியில் சிறிது நெய் விட்டு
பிரட்டை பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.
அரை வெங்காயம், இஞ்சி, பூண்டு,பச்சை மிளகாய்,
ஏலக்காய், லவங்கம் ஆகியவற்றை
மைய அரைத்துக் கொள்ளவும்.
பிரஷர் குக்கரில் மீதமுள்ள நெய் மற்றும்
எண்ணெய் விட்டு சூடானதும்
அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து
பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு
நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமானதும் காய்கறி கலவை,
பட்டாணியை சேர்க்கவும்.
காய்கறிகள் வதங்கியதும்
வறுத்து வைத்துள்ள அரிசியை போட்டு,
தேவையான அளவு தண்ணீர் விட்டு,
உப்பு போட்டு நன்கு கிளறி
குக்கரை மூடி 3 விசில் வரும் வரை வேக விடவும்.
10 நிமிடம் கழித்து குக்கரை திறந்து
நெய்யில் பொறித்து வைத்துள்ள பிரட்,
முந்திரி , திராட்சையை சேர்த்து கிளறி
கொத்துமல்லி தழையை தூவி பரிமறவும்.
0 கருத்துரைகள்:
Post a Comment