I am a free bird

பயத்தம் பருப்பு தோசை

July 06, 2009



பயத்தம் பருப்பு தோசை.

பயத்தம் பருப்பு ஒரு கப்,
பச்சைமிளகாய்-3,
இஞ்சி சிறு துண்டு,
வெங்காயம்-1
சீரகம் ஒரு டீஸ்பூன்,
எண்ணெய் தேவைக்கு,
உப்பு-தேவைக்கு.


பயத்தம் பருப்பை ஒரு நாள் இரவு முழுதும் ஊறவிடவும்.
பிறகு நன்கு கழுவி அதோடு பச்சைமிளகாய்,
இஞ்சி, உப்பு சேர்த்து மைய அரைக்கவும்.
இதோடு சீரகத்தையும் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு
கரைத்துக் கொள்ளவும்.

தோசைக்கல்லை காய வைத்து,
சிறிது எண்ணை ஊற்றி கல் முழுவதும் தேய்த்து
அதில் இந்த மாவை மெல்லிய தோசையாக ஊற்றவும்.
சுற்றிலும் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விடவும்.

தோசை பொன்னிறமாக வெந்தவுடன்
திருப்பி போட்டு வேக விடவும்.
அந்த பாகமும் வெந்தவுடன் மீண்டும் திருப்பி போட்டு
பொடியாக நறுக்கிய வெங்காயத்தை அதன் மேல் தூவி
இரண்டாக மடித்து பரிமாறவும்.

இதை இஞ்சி சட்னியுடன் சேர்த்து சாப்பிட
நல்ல ருசியாக இருக்கும்.












0 கருத்துரைகள்:

Post a Comment