அப்பம்.
மைதா ஒரு கப், வெல்லம் 3/4 கப், பழுத்த வாழைப்பழம் 1/2துண்டு,
ஏலம் பொடிசெய்தது சிறிதளவு,
எண்ணெய் பொரிக்க தேவையான அளவு
வெல்லத்தோடு சிறிது தண்ணீர் சேர்த்து, வெல்லத்தை கையால் நன்கு கரைத்துக் கொள்ளவும்.
பிறகு வாழைப்பழத்துண்டையும் சேர்த்து மசித்துக் கொள்ளவும்.
இதில் மைதா ஏலம் சேர்த்து இட்லி மாவு பதத்திற்குகரைத்துக்கொள்ளவும்.
வாணலியில் தேவையான அளவு எண்ணெய் விட்டு, எண்ணெய் காய்ந்ததும் ஒரு கரண்டியால் இந்த மாவை எடுத்து எண்ணெயில் இடவும்.
இரண்டு பக்கமும் திருப்பிப் போட்டு பொன்னிறமாக வந்தவுடன் எடுத்து விடவும்.
பார்த்தவுடனேயே நாக்கில் எச்சில் ஊறவைக்கும் அப்பம் நொடியில் ரெடி.
0 கருத்துரைகள்:
Post a Comment