ரவை பாயாசம்.
ரவை 200கிராம், சர்க்கரை 400 கிராம், பால் 200மி.லி.,
முந்திரி 10, ஏலம் 4,
நெய் 5ஸ்பூன்,
ரவையில் சிறிது நெய் சேர்த்து தண்ணீர் கலந்து சப்பாத்தி மாவு போல் செய்து கொள்ள வேண்டும்.
பிசைந்து வைத்த ரவை அரைமணி நேரம் ஊறினதும், ரவையை உருண்டைகளாக உருட்டி, கிள்ளி கிள்ளி போட்டு நிழலிலேயே காய வைக்க வேண்டும்.
வாணலி சூடான பின் சிறிது நெய் விட்டு முந்திரி பருப்பை வறுத்து எடுத்துக் கொள்ளவேண்டும்.
பிறகு நிழலில் காயவைத்த ரவை உருண்டைகளை நெய்யில் வறுத்து எடுத்துக் கொண்டு சிறிது நேரம் ஆறவிடவும்.
பிறகு கொதி தண்ணீரில் போட்டு எடுத்து, கொதித்த பாலில் உருண்டைகளை கலந்து, ஏலகாய் பொடி போட்டு, சர்க்கரை முந்திரி திராட்சை சேர்த்து நன்கு கலக்கி அருந்த சூப்பர் சுவையாக இருக்கும்.
0 கருத்துரைகள்:
Post a Comment