பயத்தம் பருப்பு பாயாசம்.
பயத்தம் பருப்பு 1 கப், பால் 1/2 லிட்டர், ஜவ்வரிசி 1 கப், சர்க்கரை 2 கப் ,
முந்திரி, திராட்சை 10கிராம், ஏலக்காய் 3,
நெய் 2 ஸ்பூன்,
பயத்தம் பருப்பு , ஜவ்வரிசியை சுத்தமாக கழுவி, அரைமணி நேரம் ஊறவைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒர் அடி கனமான அகல பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி,
கொதிக்கும் போது, பயத்தம் பருப்பு, ஜவ்வரிசி இரண்டையும் போட்டு மிதமான சூட்டில் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.
நன்றாக வெந்த பின், சர்க்கரை சேர்த்துக்கிளறவும்.
பாயாசம் பதம் வந்தவுடன் இறக்கி விடவும்.
வாணலியில் நெய் ஊற்றி, சூடானதும் முந்திரி, திராட்சை வறுத்து பாயசத்தில் போட்டு,
பின் ஏலம் பொடியையும் சேர்த்து நன்கு கிளறவும்.
ஒருபாத்திரத்தில் பாலை ஊற்றி நன்றாக கொதிக்க வைத்து, சிறிது ஆறிய பின் அந்த பாலை பாயாசத்தில் ஊற்றி, நன்கு கிளறி, டம்ளரில் ஊற்றி சிறிது நெய் சேர்த்து, குடிக்க, சுவையோ சுவை என்று கூறவைக்கும்.
இதில் ஜவ்வரிசி சேர்க்காமலும் செய்யலாம்.
0 கருத்துரைகள்:
Post a Comment