I am a free bird

பால் பணியாரம்

April 14, 2009

பச்சரிசி 100கிராம்
உளுந்து 75கிராம்
பசும்பால் 200கிராம்
தேங்காய்பால் ஒரு டம்ளர்
சர்க்கரை 100 கிராம்
ஏலக்காய் பொடி சிறிதளவு
எண்ணெய் 400மிலி

அரிசியையும் உளுந்தையும் ஐந்துமணிநேரம் ஊறவைத்து ஒன்றாக வெண்ணெய் போல அரைக்கவும். இந்த மாவை சிறு உருண்டைகளாக கிள்ளி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும் பொரிக்கும்போது வெள்ளை நிறம் மாறும் முன்பு எடுத்துவிடவும்.

பொரித்த உருண்டைகளைக் கொதிக்கிற வெந்நீரில் போட்டு உடனே எடுத்து தயாராக காய்ச்சி வைத்திருக்கும் பாலில் போடவும். சிறிது ஊறியவுடன் எடுத்து சாப்பிட வேண்டியதுதான்.

மென்மையான சுவையான, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் உணவு பதார்த்தம் இது.

குறிப்பு : பாலை நன்றாக காய்ச்சி இறக்கும் சமயம் தேங்காய்பால், சர்க்கரை ஏலம்பொடி ஆகியவற்றினைச் சேர்த்து இறக்கவும்.



1 கருத்துரைகள்:

கண்ணன் said...

மிக அருமை

Post a Comment