புழுங்கல் அரிசி 2 டம்ளர்
உளுந்து முக்கால் டம்ளர்
தேங்காய்-1
வெல்லம்/கருப்பட்டி-1டம்ளர்(பொடிசெய்தது)
வெந்தயம் 2ஸ்பூன்
ஏலக்காய்பொடி சிறிது
எண்ணெய் தேவையான அளவு
அரிசி,உளுந்து, வெந்தயம் ஆகியவற்றை நன்கு ஊறவைத்து கழுவி அரைத்து முதல் நாள் இரவே வைத்துவிடவும்.
பணியாரம் ஊற்றும்போது, ஒருபாத்திரத்தில் பொடித்த வெல்லம் தேவையான தண்ணீர் ஊற்றி கொத்திக்க விடவும் கம்பி பாகு வந்தவுடன் இறக்கி வடிகட்டி மாவில் ஊற்றி நன்கு கலக்கி வைக்கவும்.
தேங்காய் துருவல், ஏலக்காய்பொடி இரண்டையும் போட்டு கலக்கி அடுப்பில் குழிப்பணியாரசட்டியை வைத்து சூடு ஏறியதும் குழிகளில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் மாவைகுழிகளில் ஊற்றி நன்கு வெந்தத்தும் திருப்பிபோட்டு இருபுறமும் வெந்ததும் எடுத்து சூடாக பறிமாறுங்கள்.
0 கருத்துரைகள்:
Post a Comment