சொதிக்குழம்பு
February 27, 2009
தேவை:
தேங்காய்-3
பாசிப்பருப்பு ஒருகப்,
கேரட் 50கி
பீன்ஸ் 50கி
முருங்கை காய் 2,
முந்திரி 50கி
இஞ்சி 50கி
திராட்ச்சைபழம் 100கி
சின்ன வெங்காயம்100கி
பூண்டு 10பல்
பச்சைமிளகாய் 2
எலுமிச்சை பழம் 2
சீரகம், உப்பு தேவைக்கு
செய்முறை:
பாசிப் பருப்பை வேகவிடவும்.
துருவிய தேங்காயை மூன்று முறை அரைத்துப் ஒவ்வொரு முறையும் பால் எடுத்து, எடுத்தவற்றைத் தனித்தனியாக வைக்கவும்.
காய்கறிகளை நீள வாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.
முதலில் மூன்றாம் பாலை பாத்திரத்தில் ஊற்றி அதில் நீண்ட துண்டுகளாக நறுக்கிய காய்களை போட்டு வேகவிடவும்.
காய்கள் வெந்தபின் இரண்டாம் பாலை விட்டு, இஞ்சி, பூண்டு விழுது மற்றும் வேகவைத்த பாசிப்பருப்பைப் போட்டு வேக விடவும்.
இறக்குவதற்கு முன் தேவையான அளவு உப்பு சேர்க்கவும் பிறகு பச்சை மிளகாயை கீறி, சீரகம் சேர்த்துத் தாளிக்கவும்.
இப்போது முதல் பாலை விட்டு கெட்டியானதும் இறக்கவும். குழம்பு ஆறியதும் எலுமிச்சை சாறை சேர்க்கவும்.
சாதத்தில் ஊற்றி சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும். சாதத்திற்கு தொட்டுக்கொள்ள இஞ்சித்துவையல், உருளைகிழங்கு சிப்ஸ் ஏற்றது.
நவரத்ன கிரேவி.
February 26, 2009
சப்ஜி
February 26, 2009
கடப்பா
February 26, 2009
புளியோதரை
February 14, 2009
புளியோதரை
தேவையானவை:
புளி -ஒரு பெரிய எலுமிச்சை அளவு
வற்றல் மிளகாய்-12
கடுகு, உளுந்தம்பருப்பு, கருவேப்பிலை, கடலைப்பருப்பு தாளிக்கத் தேவையான அளவு. (இதில் கடலைப்பருப்பை மட்டும் சிறிதளவு தண்ணீரில் ஊறவைத்துப் பிறகு தாளிக்கும்போது சேர்த்து தாளிக்கலாம்.)
நல்லெண்ணெய்- தேவையான அளவு
பெருங்காயம், எள், வெந்தயம் ஒன்றரைத் தேக்கரண்டி.
செய்முறை:
முதலில் இரண்டரை டம்ளர் தண்ணீரில் புளியை ஊறவைத்துக்கொள்ளவும்.
எள்ளை சுத்தப்படுத்தி நன்றாக வறுத்துக் கொள்ளவும்.
வற்றல் மிளகாய் 4, வெந்தயம், பெருங்காயம் ஆகியவற்றை நன்கு வறுத்துக் கொள்ளவும்.
மிக்ஸியில்வறுத்த இந்த பொருட்களையெல்லாம் பொடியாக்கிக்கொள்ளவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிக்கத் தேவையான எண்ணெய்யை ஊற்றி கடுகு, உளுந்தம்பருப்பு, கருவேப்பிலை, ஊறவைத்த கடலைப்பருப்பு ஆகியவற்றைச் சேர்த்து மீதம் உள்ள வற்றல் மிளகாயையும் சேர்த்து தாளிக்கவும். இதில் ஊறவைத்த புளிக்கரைசலை ஊற்றி நன்கு கொதிவந்ததும்
பொடி செய்த கலவையையும் உப்புயையும் சேர்த்து நன்றாக கொதிக்க விட்டு கெட்டிக்கலவையாக வந்ததும் இறக்கிவிடவும்.
சாதத்தை உதிரியாக வடித்து சிறிது நல்லெண்ணெய் ஊற்றி கிளறி ஆறவிட்டு, பிறகு இந்த கலவையை சேர்த்து நன்கு கிளறி சிறிது நேரம் கழித்து, பிறகு சாப்பிட்டால் மிகச் சுவையாக இருக்கும்.