I am a free bird

நவரத்ன கிரேவி.

February 26, 2009

நவரத்ன கிரேவி.

கேரட் 1, காலிஃப்ளவர் 1, அவரைக்காய் 10,
குடைமிளகாய் 1, வெங்காயம் 2, தக்காளி 3,
பச்சைப்பட்டாணி 1/2 கப், பனீர் 100கிராம்,  கோவா 50 கிராம், 
இஞ்சி சிறுதுண்டு,, பூண்டு 4பல், 
தனியாபவுடர் 1 ஸ்பூன், சீரகத்தூள் 1ஸ்பூன்,
மிளகாய்பொடி 1ஸ்பூன், கரம் மசாலா 1/2 ஸ்பூன்,
நெய் 2ஸ்பூன்,
எண்ணெய், உப்பு தேவைக்கு

காலிஃப்ளவரை உப்புத் தண்ணிரில் அலசி தனித்தனியாக பிரித்து வைத்துக் கொள்ளவும்

பச்சைப்பட்டாணியை நன்கு அலசி எடுத்துக்கொள்ளவும்.

கேரட்டை நறுக்கிக் கொள்ளவும்.

அவரைகாய், குடை மிளகாய், வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

இஞ்சிபூண்டு விழுதை அரைத்துக்கொள்ளவும்.

வாணலி சூடானபின் எண்ணெய்விட்டு வெங்காயம் தக்காளி இஞ்சி பூண்டு விழுது பச்சைமிளகாய் போட்டு வதக்கி அத்துடன் நறுக்கி வைத்துள்ள காய்கறிகளையும் போட்டு வதக்கி, சீரகம் தனியா மிளகாய்,கரம் மசால் தூள்வகைகளைப் போட்டு, தேவையான உப்பு, துறுவிய கோவா, பனீர், சேர்த்து,
காய்கள் வேகும் வரை தண்ணீர் சேர்த்து நன்கு கிளறிவிடவும்.

காய்கறி வெந்து கிரேவி பதத்திற்கு வந்தவுடன், கொத்துமல்லி தழை தூவி, நன்கு கிளறி, இறக்கி விடவும்.

சுடச்சுட இட்லி, தோசை, சப்பாத்தியுடன் பரிமாற சுவை சூப்பர் என்று அனைவரையும் சொல்லவைக்கும்.

0 கருத்துரைகள்:

Post a Comment