I am a free bird

வாழைப்பூ வடை

April 18, 2009

வாழைப்பூ வடை


வாழைப்பூ - 1

கடலைப்பருப்பு - 1 கப்

சிவப்புமிளகாய் - 2

பெருங்காயத்தூள் சிறிது

சோம்பு - 1 டீஸ்பூன்

இஞ்சி - ஒரு சிறு துண்டு

வெங்காயம் - 1

பச்சை மிளகாய் - 2

கறிவேப்பிலை - சிறிது

உப்பு

எண்ணை


கடலைப்பருப்பை, மூன்று மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளவும்.

வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

வாழைப்பூவை, நறுக்கித் தண்ணீரில் போட்டு வைக்கவும்.

தண்ணீரிலிருந்து பூவை எடுத்து, ஒரு பாத்திரத்தில் போட்டு அது மூழ்கும் அளவிற்கு, வேறு சுத்தமான தண்ணீரை ஊற்றி, அடுப்பில் வைத்து ஒரிரு நிமிடங்கள் நன்றாக கொதிக்க விட்டு கீழே இறக்கி, நீரை ஒட்ட வடித்து விட்டு ஆற விடவும். சற்று ஆறியபின், கைகளால் நன்றாக பிழிந்தெடுத்து, தனியாக வைத்துக் கொள்ளவும்.

ஊறவைத்துள்ள் பருப்பை, நன்றாக அலசி, நீரை வடித்துவிட்டு, அத்துடன் காய்ந்தமிளகாய், இஞ்சி, சோம்பு, பெருங்காயம், உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். வழித்தெடுக்கும் முன்னர், வெந்த வாழைப்பூவைப் போட்டு ஓரிரு சுற்றுகள் சுற்றி எடுத்துக் கொள்ளவும். அத்துடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகப் பிசைந்துக் கொள்ளவும்.

எண்ணையைக் காயவைத்து, மாவை வடையாகத் தட்டிப் போட்டு, பொன்னிறமாகும் வரை வேகவிட்டு எடுக்கவும்.

சூடான வாழைப்பூ வடை சாப்பிட தயார்.

0 கருத்துரைகள்:

Post a Comment