கொத்தமல்லி சாம்பார்:
தேவையான பொருட்கள்:
தேங்காய் அரை மூடி துறுவியது,
கொத்தமல்லி(தனியா) ஒரு கை அளவு,
பொட்டுக்கடலை ஒரு கை அளவு,
சிவப்பு மிளகாய் 8,
பெரியவெங்காயம் 3,
தக்காளி 3,
எண்ணெய்,கடுகு, உளுந்து, கருவேப்பிலை தாளிக்க தேவையான அளவு,
உப்பு தேவையான அளவு,
கொத்தமல்லித்தழை சிறிதளவு.
செய்முறை:
தேங்காய், மல்லி, பொட்டுக்கடலை, மிளகாய் ஆகியவற்றை நீர் விட்டு நன்கு மிருதுவாக அரைத்துக்கொள்ளவும்.
வானலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கருவேப்பிலை போட்டு தாளித்து, வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதங்கியதும்
அரைத்த மசாலாவையும் சேர்த்து தேவையான அளவு நீர் விட்டு நன்கு கலக்கி கொதிக்க ஆரம்பித்தவுடன், கொத்தமல்லித்தழையைக் கிள்ளி போட்டு இறக்கவும்.
இது இட்லி, தோசை, சப்பாத்தி, எலுமிச்சை சாதத்திற்கு தொட்டு சாப்பிட ஏற்றது.
0 கருத்துரைகள்:
Post a Comment